தரம் ஐந்து மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு

0
245

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் வலய தமிழ் பாடசாலைக்கு நடாத்தப்படவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம்   வழிகாட்டலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பொறுப்பில் முன்னெடுக்கப்படும் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாக வருடாந்தம் இக்கருத்தரங்கு நடாத்தப்படுகிறது.

இம்முறை ஹட்டன் கல்வி வலயத்தில் 103 தமிழ் பாடசாலைகளைச் சேர்ந்த 3524 மாணவர்கள் இந்த இலவச கருத்தரங்கில் பங்கேற்று நன்மையடைய உள்ளனர்.

இதன் அடுத்த கட்டம் நுவரெலியா வலய தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் நடாத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here