தலவாக்கலை பஸ் நிலைய கட்டடத்தில் குளவிக் கூடு ; அச்சத்தில் பயணிகள்;

0
175

தலவாக்கலை பஸ் நிலைய கட்டடத்தில் குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளதால் பயணிகளும் பிரதேச மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பஸ் நிலைய கட்டடத்தில் பல இடங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் குளவிக் கூடுகளை சுற்றி காகங்கள் மற்றும் புறாக்கள் சுற்றித்திரிவதால் அந்த பறவைகள் குளவிக் கூடுகளை கிளறி குளவிகளை கலைத்து விடுவதால் பஸ் நிலையம் மற்றும் அதனை அண்மித்து காணப்படும் கடைகளுக்கு வந்துபோகும் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமானோர் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.

இதனால் இங்கு பாதுகாப்பற்ற நிலையேற்பட்டுள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு குளவிக்கூடுகளை விரைவில் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலவாக்கலை பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here