தீயில் கருகிய மூன்று மாத குழந்தை

0
222

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாத கைக்குழந்தையொன்று தீயில் கருகி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று மாலை முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட, அம்பத்தளை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கைக்குழந்தையும் அவரது 5 வயது சகோதரியும் மாத்திரம் வீட்டில் இருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் போது தனது தாய் கடைக்குச் சென்றதாகவும் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

வோட்டர் ஹீட்டரை நீர் நிரப்பி மின் இணைப்பில் இணைத்து விட்டு தாய் கடைக்குச் சென்ற நிலையில் கீட்டர் தீ பிடித்துள்ளதாகவும் இதன்போதே சித்திரையில் இருந்த மூன்று மாதக் குழந்தை தீயில் கருகி யிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here