தீ விபத்தில் சிக்கியதாக மூவர் சடலமாக மீட்பு

0
28

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவ மொன்று இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

இத் தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹலாவத்தை, சிங்கபுர வீதியில் வசிக்கும் 51 வயதான ஆணொருவர், 44 வயதான பெண்ணொருவர் மற்றும் 15 வயதான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்று தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீயை அணைத்து கட்டடுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வீட்டின் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம், ஆணின் சடலம் ஆகியவற்றை கண்டெடுத்தனர்.

பின்னர், வீட்டின் வரவேற்பறையில் எரிந்த நிலையில் இடிபாடுகளுக்கு இடையே சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

 ஹலாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here