11மாத குழந்தையின் தலையில் விழுந்த தேங்காய் நடந்து என்ன?

0
221

கண்டி கலஹா பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில் உள்ள 11மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது

தெல்தோட்டை நாராஹின்ன தோட்டத்தில் வசிக்கும் லோகேஸ்வரன் என்பவரர் தனது, 11மாத கை குழந்தையுடன் அந்த பகுதியில் இருக்கும் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த சந்தரப்பத்தில் நண்பர் வீட்டுக்கு அருகில் இருந்த தேங்காய் மரத்தில் உள்ள தேங்காய்  ஒன்று குறித்த குழந்தை மீது வீழ்ந்துள்ளது.

இதனால் தலை பகுதியில் காயங்கள் ஏற்ப்பட்ட நிலையில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் அங்கு இருந்து உடனடியாக பேராதனை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

எனினும் பேராதனை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக  கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here