தேசபந்து தென்னகோன் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு

0
106

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் தேசபந்து தென்னகோன் அப்பதவியில் பணிகளைத் தொடர உயர் நீதிமன்றம் இன்று (24) இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை வழங்குமாறு கோரி, கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்டோர் சமர்ப்பித்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், குறித்த மனு மீதான விசாரணை முடியும் வரை குறித்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில், சட்டத்திற்கு அமைய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here