தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற பதுளை மாணவி வர்ஷினி.

0
313

அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டி 2022ல் தேசிய மட்ட, பிரிவு 5 கட்டுரை இலக்கியம் நயத்தல் போட்டியில் ஊவா மாகாண
பது/ தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி்.ர. வர்ஷினி
2 ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

குறித்த போட்டிகள் கடந்த 05,06ம் திகதிகளில் கொழும்பு இராமநாதன் இந்து கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு போட்டியாளர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றிருந்தது. இதில் கட்டுரை நயத்தல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வர்ஷினி ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு ஊவா மண்ணிற்க்கும் பாடசாலைக்கும் பெருமையை தேடிதந்தந்துள்ளார்.

இவரது வெற்றிக்கு வழிகாட்டிய பாடசாலையின் அதிபர் திருமதி. பவானி, உப அதிபர், தமிழ் மொழி தின போட்டி பொறுப்பாசிரியர், பகுதி தலைவர்கள், ஏனைய ஆசிரியர்கள் பெற்றோர் என அனைவருக்கும் பாராட்டுக்கள்.

– ரா.கவிஷான் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here