நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மகன் இணையும் படம்

0
415

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கும் செந்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். இப்போது ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகின்றார். தானா சேந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவரின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்தது.

தற்போது அவர் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய திரைப்பட இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் டப்பிங் பேசி முடித்திருந்தார் செந்தில். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் செந்தில் தற்போது பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் செந்திலின் மகன் வேடத்தில் அவரின் மகன் மணி பிரபுவே நடித்துள்ளார்.

இது சம்மந்தமான படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவரான மணிகண்டபிரபு ஒரு மருத்துவர் ஆவார். இந்நிலையில் இப்போது தன் தந்தையின் படத்திலேயே அவர் நடிகராக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் பட்டியலில் தனித்த இடத்தைப் பிடித்தவர் செந்தில். மற்றொரு நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து 80 களிலும் 90 களிலும் பல படங்களில் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here