நடிகை ராதிகாவின் முதலாவது கணவர் காலமானார்

0
471

நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69. சென்னையில் உள்ள வீட்டில் அவர் உயிர் பிரிந்தது. 1980களில் ஆரம்பித்து மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார்.

தமிழில் அவர் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், தில்லு முல்லு, ராணி, பனிமலர், அபர்ணா, வாழ்வே மாயம், அம்மா, எச்சில் இரவுகள், ஒரு வாரிசு வருகிறது, சட்டம் சிரிக்கிறது, நன்றி மீண்டும் வருக, யுத்த காண்டம், புதுமைப் பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம், என் ஜீவன் பாடுது, பெண்மணி அவள் கண்மணி, ராம், படிக்காதவன் (தனுஷ்), ஆயிரத்தில் ஒருவன், சர்வம், அலெக்ஸ் பாண்டியன், பூஜை, ரெமோ, பொன்மகள் வந்தாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் இவர் ரித்துபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரமொழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு க்ரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனம் இருக்கிறது.
அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ,ரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பிரதாப் போத்தனுக்கு, சொந்த வாழ்க்கை அவ்வளவு வெற்றிகரமானதாக அமையவில்லை.

ராதிகாவுடன் காதல்
குறிப்பாக இவர் இயக்கிய முதல் படம் ‘மீண்டும் ஒரு காதல் கதை’. படத்தின் தலைப்பை போலவே ,வரது காதல் கதை ஆரம்பித்ததும் இந்த படத்தில் தான். இப்படத்தை தயாரித்த நடிகை ராதிகா மீது காதல் வயப்பட்டார் பிரதாப் போத்தன்.
அக்காலத்தில் இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் பரபரப்பாக பேசப்பட்டதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதே ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்த இந்த ஜோடி, திடீர் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் பிரிந்து விவாகரத்து பெற்றனர். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து 1990-ம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரதாப் போத்தன், 2012ம் ஆண்டு அவரையும் விவாகரத்து பெற்றார். இவர்களுக்க கேயா போத்தன் என்கிற மகளும் உண்டு.

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவர் கடைசியாக போட்ட முகநூல் பதிவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், வருங்கால சந்ததியினர் குறித்தும் சிரித்து கொண்டே அழும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here