கோட்டா புதனன்று நாடு திரும்புவார்: சபாநாயகர் அறிவிப்பு!

0
260

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் புதன்கிழமைக்குள் அவர் இலங்கைக்கு திரும்புவார் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு அண்மித்த இடத்தில் தற்போது கோட்டாபாய ராஜபக்ச தங்கியுள்ளதாக, அனைத்துலக ஊடகமான பிபிசி ஆங்கில செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு கோட்டாபாய சென்றாரா என்று சபாநாயகரிடம் பிபிசி செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, பாதுகாப்பு காரணங்களுக்காக இது தொடர்பில் மேலும் எதனையும் தெளிவுபடுத்தவோ குறிப்பிடவோ முடியாது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச கடற்படையின் கப்பலில் இருந்ததை உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தங்களுக்கு உறுதிப்படுத்தியதாக பிபிசி இணையத்தளம் இன்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here