நீர்வீழ்ச்சியிலிருந்து பொகவந்தலாவை இளைஞன் சடலமாக மீட்பு- வீடியோ இணைப்பு

0
840

நோட்டன்- எபடீன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற நிலையில் காணமல் போன பொவந்தலாவை இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நண்பர் ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக நேற்று குறித்த பகுதியில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளார். இந்நிலையில், இன்று நீர்வீழ்ச்சியின் 15 அடி ஆழத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் பொகவந்தலாவை- லின்ஸ்ட்ட் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதான கிருஸ்ணன் வினுசான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here