நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்களும் பணி புறக்கணிப்பு

0
95
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சுகவீன விடுமுறையை அறிவித்து  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
(13) நள்ளிரவு வரை தொழிற்சங்க நடவடிக்கைக்காக பணிபுறக்கணிப்பில் அஞ்சல் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
இப் பணிபறக்கணிப்பு காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்தின் ஊடாக விநியோகிக்க கூடிய தபால்கள் பொதியிடப்பட்ட நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களைப் பாதுகாக்கவும், தபால் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், என பல கோரிக்கைகளை முன் வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்கள் சுகவீன விடுமுறை அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் நன்மை கருதி முத்திரை வழங்கும் பிரிவு மற்றும்,பதிவு தபால் பாரம்ஏற்கும் பிரிவு மாத்திரம் இயங்குகின்றது.
இதற்கென மூன்று அதிகாரிகள் மாத்திரம் கடமையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here