நுவரெலியா, ஹய்பொரஸ்ட் ஆலயத்தில் இந்திய பிரஜை உயிரிழப்பு

0
544

நுவரெலியா, ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைபொரஸ்ட் இல- 03 பிரிவு நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாவிஷ்னு ஆலயத்தில் சிற்ப பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் இன்று காலை உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

திருவூர், தமிழ்நாட்டை சேர்ந்த பக்கிரிசாமி புருசோத்தமன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹைபொரஸ்ட் இல-03 பிரிவு நகரில் பழமையான ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய புனரமைப்புக்கு சிற்ப பணிக்காக இந்தியா, தமிழ் நாட்டிலிருந்து பக்கிரிசாமி புருவத்தின், மற்றும் சிங்காரவேலு வைத்தியநாதன் ஆகிய இருவர் 2022 பெப்பரவரி மாதம் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் இவ் ஆலயத்தில் தங்கியிருந்து சிலை வடிவமைப்பு பணிகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் வழமைப்போல இன்று காலை இவர்கள் தமது பணியை ஆரம்பித்துள்ளனர். இதன் போது பக்கிரிசாமி புருசோத்தமன் தனக்கு குளிராக இருப்பதாகவும் மயக்கம் வருவதாகவும் குடிக்க தண்ணீர் தரும்படியும் கேட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதனையடுத்து, ஊர் மக்கள் உதவியுடன் ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு இவரை பரிசோதித்த வைத்தியர் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here