பணிப்பாளர் சபை உறுப்பினராக தினகரன் பிரதம ஆசிரியர் நியமனம்

0
38

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPC) பணிப்பாளர் சபை உறுப்பினராக தினகரன் மற்றும் தினகரன் – வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமன கடிதத்தை ஊடகத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் (26) வெகுசன ஊடக அமைச்சில் வைத்து வழங்கி வைத்தார்.

1973 ஆம் ஆண்டின் இலங்கை பத்திரிகை சபையின் 5 ஆம் இலக்க சட்டத்தின் 3 (1) ஆ மற்றும் 4(4) ஆகிய பிரிவுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 33 வருடங்களாக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றி வரும் தே. செந்தில்வேலவர்,  அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்து வருவதுடன், பல்வேறு அமைப்புகளின் உயர்பீட உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.

இலங்கையில் அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சினால் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அரச அங்கீகாரம் பெறவுள்ள ஊடகவியளாளர்களுக்கான ஊடகக் கற்கைநெறி தொடர்பான 15 பேரடங்கிய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு தமிழ் ஊடக உறுப்பினராகவும் இவர் செயற்பட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here