பண்டாரவளையில் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி

0
194

பண்டாரவளை வலய கல்வி பணியகத்தில் கீழ் இயங்கும் பாடசாலையொன்றின் ஆசிரியரொருவர் தாக்கப்பட்டு தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி ராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் சம்பவம் தொடர்பில் ஊவாக மாகாண கல்விச் செயலாளரிடம் உடனடியாக அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரவளை வலய கல்வி வலயத்திற்குட்பட்ட பூனகலை இலக்கம் 01 பாடசாலை ஆசிரியரொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இதனால் சகோதர மொழி ஆசிரியர்கள் உட்பட ஏனையவர்களும் இத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் ஊவா மாகாண கல்விச் செயலாளரிடம் இது தொடர்பில் உடனடியாக அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும் அதனையடுத்தே இச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here