பஸ் சாரதி மீதான தாக்குதாலால் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்கள் வைத்தியசாலையில்

0
118

கொழும்பு – கண்டி வீதியில் இம்புல்கொட பிரதேசத்தில் பயணி ஒருவர் பஸ் சாரதியை தாக்கியதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பஸ் கொழும்பு – கண்டி வீதியில் கடவத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பஸ்ஸில் ஏறியுள்ளார். அங்கு இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி சந்தேக நபர் சாரதியை எட்டி உதைத்ததாகவும், அதன் போது வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கும் பஸ் சாரதிக்கும் இடையில் இடம்பெற்ற பணப் பரிமாற்றமே தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பஸ் கவிழ்ந்தபோது அதில் பயணிகள் யாரும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பஸ் சாரதியும் தாக்குதல் மேற்கொண்டவரும் சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here