இலங்கையின் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களின் போது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டு எடுப்பதற்கு தடை செய்யும் வகையிலேயே செயற்படுகின்றனர். நாட்டை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காகவே அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று இன்று பிரதமர் அலுவலகம் மற்றும் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளின் வீடுகளை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு என்னதான் தேவை.. எதிர்காலத்தைப் பற்றி சற்று சிந்தியுங்கள் என்றார்.