புனித கபில்வத்தைக்கான 12ஆவது புனித யாத்திரை

0
196
ஆதி கதிர்காமம் என்று அழைக்கப்படும் கபில்வத்தைக்கான புனித யாத்திரை இன்று(21) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.
 சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி தலைமையிலான 26 பேர் கொண்ட குழுவினர் இந்த யாத்திரையில் ஈடுபட்டனர் .
சித்தர்கள் குழு அமைப்பின் தலைவர் ஆதித்தன் உப தலைவர் மனோகரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் மொனராகலை யிலிருந்து  இந்த யாத்திரிகர்கள் குழு புறப்பட்டது .
அடர்ந்த காட்டுப் பகுதியில் பத்து மணித்தியாலங்கள் பயணித்த பின்பு குழுவினர் கவில்வத்தையை நேற்று சென்றடைந்தனர். முன்னதாக  அதிகாலை 2 மணியளவில் கோரக்கர் சித்தர் ஆலயத்தில் விசேட யாகம் நடாத்தப்பட்டு அனைவருக்கும் காப்பு கட்டப்பட்டது.
காரை தீவு சகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here