பெண்ணின் தலையில் துப்பாக்கி வைத்து நகைகள் கொள்ளை

0
87

காத்தான்குடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண் ஒருவரின் வீட்டினுள் கை துப்பாக்கியுடன் உள் நுழைந்த கொள்ளையன் பெணிண் தலையில் துப்பாகியால் தாக்கிவிட்டு அவரின் கழுத்தில் இருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி மீகவர் இலாகா வீதியில் குறத்த பெண்ணின் கணவர் வேலை வாய்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த பெண் இரவில் தாயாரின் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு காலையில் வீட்டிற்கு வந்து தங்கி நின்று செல்வது வழமை.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் ஒரு மணியளவில் குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ள போது அங்கு கைதுப்பாக்கியுடன் உள்நுழைந்த கொள்ளையன் கைதுப்பாகியால் பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு அவரின் கழுத்து மற்றும் கைகளில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளான்.

இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கொள்ளையனின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை  அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதனையடுத்து.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கனகராசா சரவணன்) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here