பெண் வேட்பாளரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட அர்ச்சுனா

0
86

மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதனிடம்   (20) வைத்தியர் அர்ச்சுனா அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அதனை தனது முகநூலில் நேரலையாகவும் விட்டுள்ளார்.

குறித்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் சக வேட்பாளரான வரதராஜன் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனத்தை பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்கான ஒதுக்கீடுகள் 50% வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண்களுக்கான உரிமைக் குரல்கள் அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகின்ற இக்காலத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளராக போட்டியிடுகின்ற மிதிலைச்செல்வி தனது தேர்தல் பரப்புரையின்போது வைத்திய கலாநிதி அர்ச்சுனாவிற்கு வழங்கிய தேர்தல் கால துண்டு பிரசுரத்தினை அர்ச்சுனா தனது திருவாயினையும், தன்னுடைய சாப்பாட்டு கோப்பையினையும் துடைக்கின்ற வீடியோ காட்சியினை அவரே தன்னுடைய முகப்பு பக்கத்தில் ஒளிபரப்புச் செய்து வழமை போல் தனது பண்புகளையும் வக்கிரத்தை காட்டியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here