பெருந்தோட்டப்புற சுகாதார பிரிவினருடன் அமைச்சர் ஜீவன் சந்திப்பு

0
183

தோட்ட வைத்திய அதிகாரிகள் (EMO), தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள்(EWO) மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்களை (CCO) சந்தித்து கலந்துரையாடினார் ஜீவன் தொண்மான்.

தோட்ட வைத்திய அதிகாரிகள்(EMO), தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள்(EWO) மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள்(CCO) ஆகியோகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்றைய தினம்(06) இடம்பெற்றது.

கொட்டகலை CLF வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 600 ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

வருகை தந்த உத்தியோகத்தர்களினால் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அமைச்சரின் கவணத்திற்கு நேரடியாக தெரிவித்தனர். இதன்போது அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் கருத்துதெரிவித்த அமைச்சர் அவர்கள் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் செயற்பாடு போன்று உங்களுடைய சம்பள அதிககரிப்பிற்கும் நான் உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்த அவர்.

மேலும் தற்போது தோட்டங்களில் உத்தியோகத்தர்களாள  கடமை புரிந்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் அமைச்சினூடாக வீடமைப்பு திட்டத்தினையும், காணியினை பெற்றுத்தருவதாகவும், தோட்டதொழிலாளர்களுக்கு போன்றே உங்களுக்கும் காப்புறுதி திட்டத்திதைனையும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் விளக்கமளித்தார்.

சுமார்1500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26000 சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்துள்ள காளை உணவு வழங்குவதற்காக புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்பதனை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், தோட்டப்புற மாணவர்கள் கல்வி கற்றப்பின்னர் அரச வேலைகளை தவிர்த்து தனியார் துறை மற்றும் சுயத்தொழில்களிலும் ஈடடுபட ஆயத்தமாக இருக்குமாறு தாங்களும் பிள்ளைகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கணகராஜ், அமைச்சரின் ஒருங்கினைப்பு செயலாளர் அர்ஜூன், ஹட்டன் பிராந்திய மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் ரனசிங்க மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here