பொகவந்தலாவையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

0
677

பொகவந்தலாவை, கெம்பியன் புதிய வீடமைப்புப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், பொகவந்தலாவை வமாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .

பொகவந்தலாவையில் இருந்து பலாங்கொடை பகுதியை நோக்கி பணயனித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் காயங்களுக்குள்ளான மூவரில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து எற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லையென தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

எஸ்.சதீஸ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here