பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கு லண்டன் சென்றவர்களில் 10 பேர் தலைமறைவு

0
336

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இடம்பெற்ற  பொதுநலவாய விளையாட்டுக்கு  இலங்கையிலிருந்து சென்றவர்களில் இதுவரை மொத்தமாக 10 பேர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது.

தலைமறைவானவர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. அதிகாரியொரிவரும் 9 வீரர்களும் தலைமறைவாகியுள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸாரிடம் இலங்கை அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

தலைமறைவானவர்களில் மூவர் இருக்கும் இடத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ள போதிலும் ,  அவர்களுக்கு 6 மாத விசா இருப்பாதால் உள்ளூர் சட்டத்தை சுட்டிக்காட்டி பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரியவருகிறது.

இங்கிலாந்து வருகை தந்த இலங்கை குழாத்தினரின் கடவுச் சீட்டுகளை இலங்கை குழாத்தின் அதிகாரி பொறுப்போற்றுள்ளார். அவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதை உறுதிசெய்யவே கடவுச் சீட்டுக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டு போட்டிக்காக இலங்கையிலிருந்து 160 பேர் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here