பொருத்தது போதும் வீதிக்கு இறங்குவோம் நுவரெலியாவில் எதிர்ப்பு நடவடிக்கை

0
186
“பொருத்தது போதும் வீதிக்கு இறங்குவோம்” எனும் தொனிப்பொருளில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணி இம்மாதம் 08.11.2022 நுவரெலியா நகரில் பிற்பகல் 02 மணிக்கு அரசின் செயற்பாட்டுக்கு எதிராக வீதிக்கு இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படவுள்ளனர்.
அதேநேரத்தில் அன்றைய தினம் நாடலாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படவுளனர்.
மாவட்ட,பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நுவரெலியாவிலும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வை.மகேந்திரன் தெரிவித்தார்.
.பணவீக்கத்துக்கான கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளல்.
பொது சத்துக்களை விற்பதை நிறுத்து,மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடு. அரசின் அடக்குமுறைகளை நிறுத்து என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு  நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here