பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் காயம்

0
197

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் மாணவரொருவர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதனாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. 15 வயதான பாடசாலை மாணவர் ஒருவரே காயமடைந்துள்ளதாகவும் மாத்தறை – திஹகொட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருவதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here