மக்களை தவறாக வழிநடத்துவதனாலேயே கொலை செய்ய எண்ணினேன்

0
235

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார். எனவே கோபத்தில் அவரை கொலை செய்யும் நோக்கத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இம்ரான் கான் மீது தாக்குதல் நடத்தியவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியான காணொளியில், தாக்குதல் நடத்த தம்மை எவரும் தூண்டிவிடவில்லை என்றும் துப்பாக்கித்தாரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் நேற்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசாங்கத்துக்கு எதிராக பேரணி நடத்தினார்.

திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒருவர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேநேரம் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கொலை செய்யும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது கட்சயைச் சேர்ந்த மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

எனினும், முன்னாள் பிரதமருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அவரது கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here