‘மனுஷ’ வின் இடத்திற்கு பண்டாரிகொட

0
67

மனுஷ நாணயக்காரவின் வெற்றிடத்திற்கு ஐ.ம.ச. காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பந்துல லால் பண்டாரிகொட சற்று முன்னர் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதற்கமைய, கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு 34,897 விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பந்துல லால் பண்டாரிகொட தற்போது பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார்.

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் ஐ.ம.ச. கட்சியின் தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் 09ஆம் திகதி நிராகரித்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தீர்மானத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here