மனைவியை தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்

0
260

மனைவியை, கோடரியால் தாக்கி படுகொலை செய்த நபர் எதிர்வரும் ஜுலை மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் திலின எம்.பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி, நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தில் கணவன் மனைவிக்கிடடையில் இடம்பெற்ற தகராற்று சம்பவததில், 26 வயதான சுப்பிரமணியம் சத்தியவாணி என்பவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தையடுத்து, தனது பிள்ளைகளுடன் சரணடைந்த சந்தேகநபரான பலியான பெண்ணின் கணவரை, நுவரெலியா பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

மேலும் பிள்ளைகள் இருவரையும் அரசாங்க குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணுடைய தாயின் பராமரிப்பில் பிள்ளைகளை பராமரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here