மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி எரிபொருள் நிரப்பிய பௌஸருடன் மோதி விபத்து

0
63

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி மரக்கறிகளை ஏற்றி வந்த லொறி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பிய பௌஸருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அநுராதபுரம், மிஹிந்தலை பிரதேசத்தில் ஏ 9 வீதியில், இடம்பெற்ற இச்சம்பவத்தில் லொறியின் உரிமையாளரும், அதன் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here