மரமேறி விரகு வெடிகொண்டிருந்த நிலையில் குளவி தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு

0
11
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடக்கும்பரை எம்.சீ.
தோட்டத்தில் மரத்தில் இருந்து வீழ்ந்த ஆண் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளார்.
மரமேறி விரகு வெடிகொண்டிருந்த நிலையில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர் மடக்கும்பரை எம்.சி தோட்டப்பிரிவை சேர்ந்த நடராஜா கணேஸ்வரன் (வயது 32) ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நீதிவானின் மரண விசாரணைக்காக சடலம் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுமென தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here