மருதமடு அன்னனையின ஜுபிலி ஆண்டை முன்னிட்டு தபால் முத்திரையும் வெளியீடு

0
80

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட ஜுபிலி ஆண்டை முன்னிட்டு நடை பெற்றுக்கொண்டி ருக்கும் ஆடிபெருவிழாவில் இந்த நூற்றாண்டு பெரு விழாவில் சில ஞாபகர்த்தமான நிகழ்வுகளுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படடிருந்தன.

அந்த வகையில் முதலாவது நிகழ்வாக மருதமடு அன்னனையின் பெரு விழாவை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த நவநாட்களில் இறுதி நாளான நேற்றுத் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு தபால் உரையும் 25 ரூபா பெறுமதியான தபால் முத்திரையும் வெளியீடு செய்யப்பட்டன. இவ் முத்திரை வெளியீடு மருதமடு ஆலய முன்போட்டிக்கோவில் இடம்பெற்றது.

இத் தபால் முத்திரையை தபால் மா அதிபதி எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர். பி.றுவான் சத்குமார, மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் கையளித்து வெளியீடு செய்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, கிறிஸ்தவ விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துறி பிந்தோ, பிரதி தபால்மா அதி பதி டீ.ஏ.ராஜித கே.ரணசிங்க, வட மாகாண பிரதித் தபால்மா அதிபதி திருமதி மதிவதனி வசந்தகுமார், மன்னார் அஞ்சல் அத்தியட்சகர் நாமல்குமார மற்றும் அநுராதபுரம் ஆயர் மேதகு நோபேட் அன்றாடி ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார – யாழ் குரு முதல்வர்கள், மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் அருட்பணியாளர்கள், அருட்சகோ தரிகள், அருட்சகோதாரர்கன், விழாவுக்காக வருகை தந்திருந்த பெருந் தொகையான பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார் மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்டதில் 1941 ஆம் ஆண்டு வெள்ளி விழாவாகவும் , 1974 பொன் விழாவாகவும், 2000 ஆம் ஆண்டு பவள விழாவாகவும் கொண்டாடப்பட்ட நிலையில் தற்பொழுது ஜுபிலி விழாவாக இது கொண்டாடப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here