மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் உயிரிழப்பு

0
241

மருத்துவ துறைக்கு தெரிவான காரைதீவு மாணவன் எஸ்.அக்சயன் இன்று உகந்தைக் கடலில் மூழ்கி அகால மரணமானார்.

இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவைச் சேர்ந்த மாணவன் அகால மரணம்

காரதீவைச் சேர்ந்த காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவன் சிவா அட்ஷயன் (வயது 20) எனும் மாணவன் 14.06.2024 இன்று உகந்தை சென்று வரும் வழியில் பொத்துவில்லை அண்டிய பகுதியில் லாகுகலை எனும் இடத்தில் நீலகிரி ஆற்றில் நீராடுகையில் நீரில் மூழ்கி மரணம் சம்பவித்ததாக அறியமுடிகிறது

இச்சம்பவம் காரைதீவு பிரதேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம் மாணவன் இம்முறை வெளியாகிய உயர்தரப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில்2023(2024) மருத்துவத்துறையில் அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தையும் Z- புள்ளிகள் 2.0556 பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here