மலையக தமிழ் தலைவர்களிடம் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர கூறியது என்ன?

0
69

இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை – இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கி டையிலான சந்திப் பின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நேற்று இலங்கை வந்திருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.வேலுகுமார் மற்றும் எம்.உதயகுமார் ஆகியோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமே ஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், கல்வி இராஜங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் எம்.பி. ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி சந்திப்பின்போது நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற மைக்கு வாழ்த்துத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம். பி., இந்தியா எப்போதும் பலம் மிக்கதாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறி ருந்தால்தான் இலங்கையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டினார். சீதையம்மன் ஆலயம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அதனை அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகள் குறித்து அவதானம் செலுத்துமாறு உயர்ஸ்தானிகருக்கு ஜெய்சங்கர் ஆலோசனை வழங்கினார். மேலும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 4 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுமாறும், அதன் பின்னர் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மலையகத்தில் முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here