மஸ்கெலியா – நல்லத்தண்ணி வீதியில் கோர விபத்து இருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு

0
390

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா – நல்லத்தண்ணி வீதியில் வலதல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது .

நல்லத்தண்ணி வலதல பகுதியில் இருந்து மஸகெலியாவிற்குச் சென்ற ஆட்டோ ஒன்றும் மஸ்கெலியாவிலிருந்து ரொத்தஸ் பால் சேகரிப்பு நிலையத்திற்குச் சென்ற பல்சேகரிப்பு வண்டியும் மோதிக்கொண்டதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஏனையவர்கள் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் – சம்பவ இடத்திலிருந்து வினோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here