மஹிந்த தேசப்பிரிய, ரவூப் ஹக்கீம், கிழக்கு ஆளுநர் செந்தில்ஆகியோருக்கும் கம்பன்விழாவில் கௌரவம்

0
155

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2024 கொழும்பு இராமக்கிருஷ்ணன் மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வுகள் கம்பன் கழகத் தலைவர் ஈ.கனேஷ் தெய்வநாயகம்   தலைமையில் நடைபெற்றது.

இறுதி நாள் நிகழ்வு நேற்று 17.06.2024  சான்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு   எலும்பியர் வைத்திய நிபுணர் டாக்டர் சண்முகம் ஸ்ரீதரன், தமிழறிஞர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்,  வட மாகாண முன்னாள் பிரதம செயலாளர்,  லட்சுமணன் இளங்கோவன், முன்னாள் தேர்தல் ஆணையர்  மஹிந்த தேசப்பிரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் , ரவுப் ஹக்கீம் – பா.உ,   கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்  கம்பன் புகழ் விருது தமிழ்நாடு எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர்களுக்கு விருதுகளை  தலைவர் ஈ.கனேஷ் தெய்வநாயகம், மலேசியா பா.உ டத்தோ ஸ்ரீ சரவணன்   புதுச்சேரி முன்னாள் சபா நாயகர் வி.பி. சிவக்கொழுந்து ஆகியோர்கள் முன்னிலையில் மாலையிட்டு பொன்னாடைபோற்றி விருதும் விசேட பட்டமும் வழங்கி கம்பன் விழா ஏற்பாட்டாளர்கள் கௌரவித்தனர்

அத்துடன் கம்பவாரிதி இ.ஜெயராஜ், தலைமையில் நீதிமன்ற விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பேராசிரியர் சுல்தான் பர்வினா,  வழக்கறிஞர் ஸ்ரீமதி கே சுமதி ஆகியோர்களும் பங்குபற்றி சபையோரை மகிழ்வித்தனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here