மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர்

0
91

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பாராளுமன்ற விவகாரச் செயலாளராகக் கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே, மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விலகி, சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கொண்டார் .
இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அவரை மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு நியமித்துள்ளார்.
குமாரசிறி ஹெட்டிகே, பல தசாப்தங்களாக அரசியல் விவகாரங்களில் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமாக இருந்து நம்பிக்கையாக செயலாற்றிய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here