மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்தி சபைகள் அறிமுகம்?

0
190

மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போது எம். பி.யுமான மைத்திரிபால சிறிசேன, நாட்டின் கிராமப்புற மக்களு டன் இணைந்து செயல்படுவதில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்.

கூடுதல் செலவுகள் இன்றி, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் சபைகள் இயங்க முடியும் – என்றும் கூறி அதனை அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். மைத்திரிபாலவுக்கு பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப படுத்துவதற்கு தயார் என்று கூறினார். இந்த நடவடிக்கைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் எம். பியுமான மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here