நுவரலியாவில் – மாணவர்களுக்கானகல்வி கண்காட்சி

0
21

UK, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பின்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழக ங்களுடன் வெளிநாட்டு கற்கை விருப்பங்களை ஆராய மாணவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் கல்வி கண்காட்சி அக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதாக International Centre for Foreign Studies(ICFS) அறிவித்துள்ளது..

ICFS ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ICFS, வரவிருக்கும் இன்டேக்களுக்கு இங்கிலாந்தில் உள்ள De Montfort University பல்கலைக்கழகத்தில் இருந்து ஸ்பாட் ஆஃபர் கடிதங்களைப் பெற பங்கேற்பாளர்கள் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறியது.

ICFS கல்வி நிலையத்தின் CEO, சதுரிகா திஸாநாயகே , IELTS தள்ளுபடிகள், புலமைப்பரிசில்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்.
இந்நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் கல்விக்கான ஆய்வுக் கடன் பெறுவதற்கான வாய்ப்பையும் இந்த நிகழ்வு மாணவர்களுக்கு வழங்கும் என்றார். இந்த வசதிக்கான தகுதியை மாணவர்கள் அந்த இடத்திலேயே தீர்மானிக்கலாம்.

சர்வதேச கல்வி விருப்பங்களை மாணவர்கள் ஆராய்வதற்கு கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
ICFS இன் சேவைகள் முற்றிலும் இலவசம் என்றும், வெளிநாட்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளைக் கண்டறிய இந்த அமைப்பு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார். கல்விக் கடன் வசதி இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களுக்கான உலகளாவிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ICFS ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களையும் கலந்துகொள்ளவும், வெளிநாட்டில் படிப்பதற்கான பயணத்தைத் தொடங்கவும் ஊக்குவிக்கிறது.

உங்கள் வாய்ப்புகளை ஆராய எங்கள் குழுவை வந்து சந்திக்கவும்.உங்கள் எதிர்காலத்தை ஆராய்வதற்கான இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here