மாத்திரைகளை திடீரென வாயிலிட்டு மறைக்க முயற்சித்த பெண் சிறைக்காவலர் கைது

0
318

தன்னிடம் இருந்த போதைப்பொருளுக்கு நிகரான மாத்திரைகளை திடீரென வாயிலிட்டு மறைக்க முயற்சித்த பெண் சிறைக்காவலர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் சோதனையிடப்படும் குறித்த சந்தர்ப்பத்தில் 52 வயதுடைய பெண் சிறைக்காவலரை சோதனையிட்ட போது, போதைப்பொருளுக்கு நிகரான மாத்திரைகளை திடீரென வாயிலிட்டு மறைக்க முயற்சித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் சிறைக்காவலர் மேலதிக விசாரணைகளுக்காக இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையின், பெண் சிறைச்சாலையின் பாதுகாப்பு பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த பெண் சிறைக்காவலர் கைது செய்யப்பட்ட குறித்த் பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here