மின்சார கட்டணம் 250 வீதமாக அதிகரிக்கும்

0
235

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை 250 வீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்தார்.

கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால்இ இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் பாதிக்கப்படுவதுடன், பிற செயல்பாட்டு சிக்கல்கள் உருவாகும் என்றும் அவர் கூறினார். தற்போது, இலங்கை மின்சார சபையின் வருமானம் 277 பில்லியன் ரூபாவாகவுள்ளதுடன்இ செலவுகள் 755 பில்லியன் ரூபாவாகவுள்ளது.

செலவுகளை சமாளிக்க மின்கட்டணத்தை உயர்த்துவது அவசியம் என்றார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெர்டினாண்டோஇ மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here