மின்தடை தொடர்பாக 6 நாட்களில் 61,000 புகார்கள்

0
87

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான கடும் மழையுடனான னாலநிலையினால், கடந்த ஆறு நாட்களில் (மே 21-26) மின்தடை தொடர்பாக 61ஆயிரம் புகார்கள் கிடைக்கப்;பெற்றுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற புகார்களுக்கு அமைவாக, 467,500 க்கும் மேற்பட்ட மின் பாவணையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுள், 425,500 நுகர்வோருக்கு நேற’று பிறபகல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆக 26,700 முறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து நுகர்வோருக்கும் மின்சாரத்தை மீள வழங்குவதற்கு 24 மணி நேரமும் மின்சாரசபை உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here