மின் இணைப்பை துண்டிக்கவுள்ளதாக பெண்கள் மருத்துவமனைக்கு அறிவிப்பு

0
170

170 இலட்சம் மின்சார கட்டணத்தை உடனடியாக செலுத்தாது விடின் முன்னறிவிப்பின்றி மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று கோட்டை வீதியில் உள்ள பெண்கள் மருத்துவனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் மின்சார கட்டணத்தை செலுத்த சுகாதார அமைச்சுக்கு எவ்வித ஏற்பாடும் கிடைக்காததால் பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை என்று மருத்துவமனையின் பேச்சாளரொருவர்  தெரிவித்துள்ளார்.

பணியாளர்களின் பணம் செலுத்தப்பட்ட பின்னர் மின்சார கட்டணத்திற்கான பணத்தை வழங்குவதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும், பணியாளர்களின் பணம் நேற்று முன்நாள் (25.11.2022) வழங்கப்பட்டதால், மின்சார கட்டணத்திற்கான பணம் அடுத்த வாரத்துக்குள் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் மின்சார கட்டணத்தை செலுத்தாது விட்டால், கோட்டை வீதியில் உள்ள பெண்கள் மருத்துவமனையின் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here