முச்சக்கர வண்டியின் மீது பாரிய மரம் வீழ்ந்து ஒருவர் பலி

0
1204

ஹைபொரஸ்ட் இலக்கம் 02 பிரிவில் இருந்து இராகலையை நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது பாரிய மரம் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹய்பொரஸ்ட் இல – 02 ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர் என மூவர் பயணித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஆலய செயலாளரான பி.எஸ்.மயில்வாகனம் (வயது 61) என்பவர் பலத்த காயங்களுக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர்.

ஏனைய மூவரும் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர்.

ஆ.ரமேஸ்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here