மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆண் குழந்தை

0
405

அடுக்கு மாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், மூன்று வயதான ஆண் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து இவ்வாறு குழந்தையொன்று தூக்கி வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிரான்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயின் சகோதரரை (தாய்மாமன்) பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here