மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கு யாழில் பெரும் வரவேற்பு

0
89

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார்.

உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் சென்று இறங்கிய ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைப்பதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here