மோட்டார் சைக்கிளில் முந்திச் செல்ல முற்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை பலி

0
722

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் மோதிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். கினிகத்தேனை – ரம்பாதெனிய பகுதியில்  நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கினிகத்தேனை- பல்லேவல பிரதேசத்தைச் சேர்ந்த  39 வயதானவர் என்றும், உயிரிழந்த நபர் மோட்டார் சைக்களில் கினிகத்தேனை நகரிலிருந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, தனக்கு முன்பாக பயணித்த கார் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, வீதி வழுக்கியதால் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த பஸ்ஸில் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளானது வழுக்கியவாறு பஸ்ஸின் அடியில் சென்ற நிலையில், கடும் காயமடைந்த அவர், கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

எனினும் இந்த விபத்தை தடுக்க பஸ்ஸின் சாரதி முயற்சி எடுத்த போதிலும் பஸ் மண்திட்டு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here