யாசகரின் பணப்பையிலிருந்து 1 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மீட்பு

0
236

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் ஆராய்ச்சி கட்டுவ, ஆனவிழுந்தாவ பெற்றோல நிலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிளில் மோதி காயமுற்ற யாசகரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த பையில் இருந்து ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

பணத்துக்கு மேலதிகமாக 5 வங்கி கணக்கு புத்தகங்களையும் ஆராய்ச்சிகட்டுவ பிரதேச இளைஞர்கள் மீட்டு , பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மோதி காயமுற்ற யாசகர் எனக் கூறப்படும் நபர் சுமார் 65 வயதானவர் என்றும் அவரிடமிருந்து எடுத்த பணத்தை பொலிஸ் அதிகாரியின் முன்னால் எண்ணப்பட்டு அவரிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here