ரணிலுடன் இணையும் ராஜித்த?

0
69

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன நாளை (13 ஆம் திகதி) காலை அரசாங்கத்தில் இணையவுள்ளார்.

கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையில் நடைபெறவுள்ள வைபவமொன்றில், ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ராஜித்த எம்.பி. அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜித்த சேனாரத்ன (11 ஆம் திகதி) களுத்துறை மாவட்டத்தில், தனது செயற்பாட்டாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினார் என்பது குறித்த விபரங்களை அவர் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here