ரணிலை ஆதரிக்கும் ‘மொட்டு’வின் உறுப்பினர்களுக்கு புதிய கட்சி

0
22

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல், இன்று (20) செவ்வாய்க்கிழமை, கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும், இந்தப் புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புதிய அரசியல் கட்சிக்கு, பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான அரசியலமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், அந்த அரசியலமைப்பின் படி செயற்படுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here