ரயிலில் மோதி மயிரிழையில் உயிர்தப்பிய பெண் – அதிர்ச்சியில் பயணிகள் – வீடியோ இணைப்பு

0
477

கடுகதி ரயிலில் மோதுண்டு வயோதிபப்பெண் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கலபட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் 1.30 மணியளவில் இங்குரு ஓயாவிற்கும் கலபட பகுதிக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பொதுப்போக்குவரத்து வசதிகளற்ற நிலையிலே முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக குறித்த வயோதிபப் பெண ரயில் கடவையூடாக சென்றுள்ளார்.

இதன்போது, கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த கடுகதி ரயிலை கண்டு ரயில் பாதையிலிருந்து ஒதுங்க முற்பட்ட வேளையில், ரயில் உரசி புற் தரையில் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து, குறித்த இடத்தில் ரயில் சுமார் 15 நிமிடம் தரித்து நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.

ரயில் கடவையில் பாதசாரிகள் நடந்து செல்வது சட்டவிரோதமான போது குறித்த பகுதி மக்கள் பொதுப்போக்குவரத்து வசதிகளிண்மையால் அன்றாட தேவைகளுக்கு ரயில் கடவை பொதுப்போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here